Wednesday, 12 August 2015

பெண்ணின் தந்தை

கன்னியா தானம் செய்யும் தந்தை
கண்ணில் கொட்டும் ஆனந்த ஓடை.
மாப்பிள்ளை என்னவோ சிறுபிள்ளை,
மகளும் அவனும் சம நிலை
தான் காத்து வளர்த்த இளநாற்றை
தனதாய்க் காக்க வல்லார் சம்மந்தி
தாரை வார்த்துத் தந்தேன் என் கண்ணை
தந்தை இனி நீரே என்றது கண்ணீர்.

No comments:

Post a Comment