Wednesday, 12 August 2015

நிலையற்ற வாழ்வு


மாறி மாறித் தடுமாறும் மனம்
மரம் விட்டு மரம் தாவும் குரங்கு.
மண்டியிட்டு சொல் கேட்க அறியாது
மனம் போன போக்கில் போகும் ஜீவன்.
எரியும் தீபம் ஒளி தருவது கூட
எண்ணெய் இருக்கும் வரையே, பின்
என்னை உன்னைக் காண்பது ஏது
ஏறிவரும் சூரியன் எழுந்து வரும் வரை?
நவின்ற இன்சொல் நிற்பது எது வரை?
நாவிற்கும் செவிக்கும் இடைப்பட்ட தூரம் வரை
நற்சொல் நஞ்சாய் மாறி நகமாய்த் தைக்க
நொடி கூட எடுப்பதில்லை, கண்டீரோ?
மேகம் சூழ்ந்த வானம் எத்தனை கணம் வரை?
பேரும் புகழும் அவ்வாறே, வரும் போகும்.
சேர்ந்த முகில் கூட்டம் பிரிவதே இயல்பு.
சேதம் உனக்கே பேதையே மாயையில் மயங்கிட.

No comments:

Post a Comment