Thursday, 27 December 2012

எண்ணச்சிதறல், என்னென்று சொல்லுங்கள் !!

சிலவற்றை சொல்ல முடிவதில்லை 
சொல்லிவிட்டாலும் மதிப்பில்லை 
மறக்க ஏன் ஆவதில்லை ?
மனதுக்குள்ளும் இடமில்லை.
எங்கு தான் கொட்டுவது ?
கோபமாய் உற்றாரிடமும் 
குமுரலாய் பெற்றாரிடமும் 
விரக்தியாய் சுற்றத்திடமும் 

புலம்பலாய் நண்பர்களிடமும்  
சிடு சிடுப்பாய் பிள்ளையிடமும் 
கடு கடுப்பாய் வேலைஆட்களிடமும் 
வடித்து என்ன ஆவதோ ?

தவிக்கும் உன்  மனதுக்குள்ளே
தங்கமாய் ஜொலிக்கும் அந்தப் 
பரம்பொருளை ஏன் காணாய் நீ ?
அதன் ஒளி உன்னை ஈர்க்கவில்லையா ?

மன அழுத்தத்தை உடைத் தெறிக்கும் 
அருளாற்றல் அன்றோ அது?
மன அழுக்கையும் துடைத்துத்,
தும்பைப் பூப்போல் உன்னை 

தூய்மைப் படுத்தும் துடைப்பானும் 
அதுவன்றி வேறென்னவோ?
உன்னை  உள்நோக்கி சற்றே பார்!
உனக்கே தெரியும் உன்பலம், என்னென்று ஏதென்று?