Tuesday, 10 November 2015

செல்லக் கவிஞர்

செல்லக் கவிஞர் 

ஒரு ஊரில் ஒரு கவிஞர்
ஒரே குலத்தில் உதித்தோம் நாங்கள்
ஒத்த மரபை ஒழுகும் நகரத்தார்
ஓங்குமவர் புகழில் நிமிர்ந்தோம் நாமே
பாலகர்க்கே வாழ்வை ஈந்து, இன்று
பாலசாகித்ய அகாதமி விருதும் பெற்றார்.
வந்தீர் ஐயா, எந்நகர் தனிலே,
வல்லமை எம்முள் வீசிச் செல்வீர்.

புயலாய் ஓடும் பெற்றோர்
புதைத்தனர் பிள்ளையின் மகிழ்வை
காலம் கழிந்தது நாளது சுழல
காலும் கையும் ஓய்ந்தது அதிலே
பலியோ ஆனது குழந்தை பாவம்
பலவாய்க் கண்ட கனவுகள் கரைய
குழந்தைக் கவிஞர் வந்தீர் அய்யா!
குதூகலம் சிறுவரில் மீட்டுத் தர!

சிரிக்க மறந்த சிறார் தமக்கு
சின்னச் சின்னக் கதை சொல்லி
தொலைக்காட்சி பிம்பம் விட்டு
தொலைவில் இட்டுச் சென்றீரே!
பேசித் தீர்க்கவோ மொழி கற்றார்?
பேதைமை போக்கும் படித்தல் என்று
பாட்டும் கதையும் பதிப்பில் இட்டீர்
பாடி ஆடி மகிழ, மக்கட்செல்வம்.

நாயும் பூனையும் ஆடும் கோழியும்
நயந்து வெளிவரும் புலவரின் பாவில்
ஞாயிறு திங்கள் விண்வெளிக் களமென
ஞானப் பொறியைத் தூண்டும் வரிகள்
பெட்டகம் நிறையப் புத்தகம் தந்து
பெற்றவள் போலே புரிந்து கொண்டீர்
குழவியும் மொழியும் செல்வமாய்க் கொண்டு
குழந்தைகளுக்கே 'செல்ல'மானீர்!