Wednesday, 12 August 2015

நீயே உனக்கு உலகம்!

தாயே உலகம் தவழும் காலம் வரை
தேடித் தேடி நண்பர்கள் சேர்த்து
விறுவிறுவென வளர்ந்த பின்னர்
வீடு வெறும் தங்கும் அறையே.
தனிமை தட்டும் நேரத்தில் தாய்
தனக்கென உலகம் திறக்க வேண்டும்
இறைவன் சேவையில் ஈடுபட்டு
இன்பம் காண்பது மிகுந்த சிறப்பு
வட்டம் தொடங்கி முடிவது போல்
வாழ்க்கை இணைக்கும் கோடுகளை.
பறந்த குஞ்சுகள் என்றேனும் தாயின்
பரந்த மனதை நிறைக்க வருமே!

No comments:

Post a Comment