மகளாய் வருபவள் மகாலக்ஷ்மி
செல்வமே பிறந்தார் போல,
தந்தையின் செல்லம் அவள்
மங்கையாய் மலர்கையில்
மண்ணைத் தூற்றும் காற்றாய்
கண்டவர் மனதைச் சாய்க்கிறாள்.
நெஞ்சம் தொட தலைவன் வர
தஞ்சம் புக தயாராகிறாள்
கைப்பற்றி தனதான பின்
செய்யாதன செய்து நிற்கிறாள்
சட்டம் எழுதி எங்குமில்லை
திட்டம் தானே வகுக்கிறாள்
குறிப்பறிந்து கடமை ஆற்றி
குடும்பத்தைத் தாங்குகிறாள்
தாய் ஆகும் போது பூமாதேவி
தாங்கும் திறன் அபாரம்
புதுப்புது பாகம் தோன்ற
பழையதென்ன முடிந்ததா?
அடுக்கு மாடி கட்டிட
அகலுமோ கீழ் தட்டு?
விரிந்து பரவும் பொறுப்புகள்
பறந்து பற்றி ஆற்றுவாள்.
விழுந்து விழுந்து சேவைகள்
பழகிச் செய்யும் பெண்ணுக்கு
பொன்னும் பொருளும் பூட்டிப்பார்
புன்னகை அதனால் பிறக்கலாம்
நிலைக்கும் அது என்று மட்டும்
தலைகீழ் கணக்குப் போடாதே!
என்ன தான் செய்தாலென்ன
தன்னலமற்ற அன்பு அவள்
தெய்வ உள்ளம் கொண்டாலும்
மெய்யில் அவளும் ஜீவனே
பக்குவம் பெற்று மீண்டிட
தக்க காலம் பிடிக்காதா?
நட்பைத் தானே தேடுகிறாள்
நயந்து வழங்க முடியாதா?
உன் மனமும் குணமும் பொறுப்பவளை
உள்ளங்கையில் தாங்க வேண்டாம்
போற்றிப் புகழ வேண்டாமய்யா
குற்றமே சொல்லிக் குட்டாதிருமே!
செல்வமே பிறந்தார் போல,
தந்தையின் செல்லம் அவள்
மங்கையாய் மலர்கையில்
மண்ணைத் தூற்றும் காற்றாய்
கண்டவர் மனதைச் சாய்க்கிறாள்.
நெஞ்சம் தொட தலைவன் வர
தஞ்சம் புக தயாராகிறாள்
கைப்பற்றி தனதான பின்
செய்யாதன செய்து நிற்கிறாள்
சட்டம் எழுதி எங்குமில்லை
திட்டம் தானே வகுக்கிறாள்
குறிப்பறிந்து கடமை ஆற்றி
குடும்பத்தைத் தாங்குகிறாள்
தாய் ஆகும் போது பூமாதேவி
தாங்கும் திறன் அபாரம்
புதுப்புது பாகம் தோன்ற
பழையதென்ன முடிந்ததா?
அடுக்கு மாடி கட்டிட
அகலுமோ கீழ் தட்டு?
விரிந்து பரவும் பொறுப்புகள்
பறந்து பற்றி ஆற்றுவாள்.
விழுந்து விழுந்து சேவைகள்
பழகிச் செய்யும் பெண்ணுக்கு
பொன்னும் பொருளும் பூட்டிப்பார்
புன்னகை அதனால் பிறக்கலாம்
நிலைக்கும் அது என்று மட்டும்
தலைகீழ் கணக்குப் போடாதே!
என்ன தான் செய்தாலென்ன
தன்னலமற்ற அன்பு அவள்
தெய்வ உள்ளம் கொண்டாலும்
மெய்யில் அவளும் ஜீவனே
பக்குவம் பெற்று மீண்டிட
தக்க காலம் பிடிக்காதா?
நட்பைத் தானே தேடுகிறாள்
நயந்து வழங்க முடியாதா?
உன் மனமும் குணமும் பொறுப்பவளை
உள்ளங்கையில் தாங்க வேண்டாம்
போற்றிப் புகழ வேண்டாமய்யா
குற்றமே சொல்லிக் குட்டாதிருமே!
No comments:
Post a Comment