Friday, 9 January 2015

எருமை சிறுமை இல்லை!

எருமை போல் இருந்திட
எவரால் முடியும் சொல்லுங்கள்!
எருமை! எருமை! என்று
என்றும் திட்டும் மக்களே!

தொட்டால் குற்றம்
பட்டால் குற்றம்!
சொல்லும் சொல்லோ,
கொல்லும் பலரை!

தெரிந்து தான் நிற்குமோ?
தெரியாமல் நிற்குமோ?
ஆடாமல் அசையாமல்
அதிராது நின்றிடும்

எருமையின் குணம்
எதிர்மறையாய்ப் பெற்றோமே!
எதற்குமே அதிர்வுதான்
என்றானது மனிதமனம்.

பசைபோல் உலகில் ஒட்டி
அசையாதே ஆட்டுவோர்முன்.
ஆட்டுவிப்போன் அவனென்று
ஆறுதல் உனக்கு வேண்டும்.

அறியாத எருமைபோல
அறிந்த நீ இருந்திடேன் !
விலையற்ற பாடம்
விலங்குகலிடமிருந்தும்!


2 comments: